பிரியமானவர்களே ,கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. நாம் இப்போது கடைசி காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன் காலத்திற்கும் இந்த காலத்திற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கிறது . முன் காலத்தில் பாவத்தை காண்பது மிக அரிதாயிருந்தது . உதாரணமாக என்னுடைய தாத்தா வருடம் ஒரு முறை வெளி ஊருக்கு சென்று சாராயம் குடித்து விட்டு வருவாராம் அதனால் அவரரிடம் ஒரு மாத அளவில் குடும்பத்தில் யாரும் பேச மாட்டார்களாம். பழைய காலத்து பாவம் இப்படி இருந்தது .ஆனால் இப்போது என்ன நிலை? பள்ளியில் படிக்கும் மாணவன் வரை வீட்டருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளில் நிற்கின்றனர்.
அதை விட வேதனையான விஷயம், நான் ஒரு நாள் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இந்த கேவலமான காட்சியை பார்த்தேன். அந்த ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் 4 பெண்கள் மதுபானம் வாங்குவதை கண்டேன். என்ன கேவலம் இது? இது தமிழ் நாடா அல்லது வெளிநாடா ?
இதே போல பாவத்தை தூண்ட கூடிய டிவி, சீரியல் , சினிமா ,இன்டர்நெட் இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த காலத்தில் நம்மை கெடுத்துக்கொண்டிருகின்றன.
பழைய காலத்தில் உள்ள பாவங்களை மேற்கொள்ள கிறிஸ்தவர்களாய் வாழ்ந்தால் போதுமானதாய் இருந்திருக்கலாம். ஆனால் இந்த காலத்தில் இந்த பாவ உலகத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பரிசுத்த ஆவியானவரின் துணை வேண்டும்.
" இயேசுவின் நாமத்தினாலும் , நமது தேவனுடைய ( பரிசுத்த ) ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள்.பரிசுத்தமாக்கபட்டீர்கள், நீதிமான்களாக்கப்படீர்கள் " 1 கொரி 6:11
இந்த வசனத்தின் படி பார்த்தீர்களானால் , பரிசுத்த ஆவியானவரால் தான் கழுவப்பட முடியும் . பரிசுத்தமாக்கப்பட முடியும் , நீதிமாங்களாக்கபட முடியும். இந்த உலகத்தில் உள்ள பாவங்களை மேற்கொள்ள பரிசுத்த ஆவியானவரை பெற்றிருக்க வேண்டும் .
பரிசுத்த ஆவியானவரை பெறுவது எப்படி ? நான் ரொம்ப வருடங்களாக பரிசுத்த ஆவியை கேட்டுகொண்டிருந்தேன் . எல்லா பாவங்களையும் அறிக்கையிட்டேன். ஆனாலும் நான் பெறாமல் இருந்தேன் . ஒரு நாள் மிகவும் பிடிவாதமாக பரிசுத்த ஆவியை கேட்டு ஜெபித்தேன் .கர்த்தர் ஒரு காரியத்தை உணர்த்தினார் . நான் எல்லா பாவங்களையும் அறிக்கையிட்டாலும் சினிமா பார்ப்பது பாவமென்று உணராதவனாய் இருந்தேன் .தேவன் அதை உணர்த்தினார் . உடனே மன்னிப்பு கேட்டு அந்த அடிமைத்தனத்தை என்னை விட்டு எடுத்துப்போட்டேன் . அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வந்து அளவில்லாமல் நிரப்பினார் . பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இருக்கும் போது பாவங்களை மேற்கொள்ள முடிகிறது .
பரிசுத்த ஆவியானவர் தினமும் அவரில் நிரம்பும்படி வாஞ்சிகிறார். நாம் அவரில் அன்பு செலுத்த வேண்டும் என்று பிரியப்படுகிறார் . உங்களின் கணவரோ, மனைவியோ , தாயோ அல்லது தகப்பனோ செலுத்தும் அன்பைவிட அதிகமான அன்பை செலுத்துகிறார் . ஆவியானவரை செல்லம் வைரம் என்று கொஞ்சி பாருங்கள் . அவருக்கு உண்டாகும் சந்தோஷத்தை நீங்கள் காண்பீர்கள் .
நீங்களும் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டு இந்த பாவ உலகத்தை ஜெயித்து பரலோக ராஜ்யத்துக்கு தகுதியடைய வாழ்த்துகிறேன் .
P.தீபன் சாமுவேல்
ராமையன்பட்டி